சினிமா செய்திகள்
தமிழ் இசைக்கு பவுண்டேஷன் அமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
விஜய்யின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் இசை ஆராய்ச்சிக்கான ’ஏ.ஆர். ரஹ்மான் ஃபவுண்டேசன்’ ஒன்றை நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் மற்றும் குட்டி ரேவதி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
ஏ.ஆர். ரஹ்மானுக்குத் தமிழ் மீது உள்ள பற்றுக் குறித்துக் கூற தேவையில்லை, மூவாயிரம் ஆண்டுக்கு முந்திய தமிழ் இசை குறித்து, ஆய்வு செய்ய ஒரு ஃபவுண்டேஷனை நிறுவுவதற்காக ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சர்கார் ஆடியோ விழா பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில், ரஹ்மானின் ஃபவுண்டேஷன் துவக்கம் பாராட்டுக்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.