இந்தியா
இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் மூலம், இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் உருமாறியுள்ள கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நாட்டு உடனான விமான சேவைகளை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. இந்தியாவில் ஜனவரி 7 ஆம் தேதி வரையில் பிரிட்டனுடனான விமான சேவை கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33 ஆயிரம் பேரை பரிசோனைக்கு உட்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக வெளிவந்த பரிசோனை முடிவுகளில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்திருந்தது.
இந்த நிலையில், மீதமுள்ள ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மேலும் 5 பேருக்கு புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. உருமாறிய கொரோனா தொற்றை உறுதி செய்ய பெங்களூரு, ஹைதராபாத் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளன.