கிரிக்கெட்
விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமாக செயல்பட்ட முகமது அசாருதீன் சென்ற நான்கு சக்கர வாகனம் ஒன்று, கோர விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் அசாருதீன், பெரிதாக காயம் இல்லாமல் தப்பித்துவிட்டார் என்று காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாருதீன், கார் ஒன்றில் ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. நேற்று மாதபோர் மாவட்டத்தைக் கடந்து, சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அசாருதீன் சென்ற கார், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் அசாருதீனுக்கோ, அசாருதீனுடன் பயணம் செய்த மூன்று பேருக்கோ பெரிதாக எந்தக் காயங்களும் ஏற்படவில்லை.
ஆனால் கார் கவிழ்ந்த இடத்திற்கு அருகிலிருந்து உணவகத்தின் ஊழியர் ஒருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டதாக தகவல். விபத்துக்குப் பின்னர் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அசாருதீன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.