தமிழ்நாடு
‘ரஜினியை காயப்படுத்துனதுக்கு வருத்தப்பட்றேன்..!’- மனமுடைந்து பேசிய சீமான்
![Rajinikanth - Seeman - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Rajinikanth-Seeman-1.jpg)
நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் ரஜினியை அரசியல் களத்தில் கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான் கூறியதாவது:-
‘ரஜினியைத் திரையில் கொண்டாடிய ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதால் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்திருக்கிறேன். அதனால் அவரும், அவரது குடும்பமும், அவரது ரசிகர்களும் காயப்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருந்துகிறேன். அவர் மிகப் பெரிய திரை ஆளுமை. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அவரை எல்லோரும் கொண்டாடுவார்கள். இனி நாம் தமிழர் கட்சியினரும் ரஜினியைக் கொண்டாடுவோம். நானும் இனி ரஜினியைக் கொண்டாடுவேன்.
என் எதிர்ப்பு காரணமாகத்தான் ரஜினி, அரசியலிலிருந்து விலகினாரா என்பது தெரியவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. எப்படி இருந்தாலும் அவர் விலகியது வரவேற்கத்தக்கது’ இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.