தமிழ்நாடு
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கட்டுப்பாட்டில் உள்ள உணவகங்கள், ரிசார்ட், தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற இடங்களில் 31 டிசம்பர் 2020 அன்று இரவு 2021 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை செய்யப்படுகிறது.
நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதின் காரணமாக 31 டிசம்பர் 2020 மற்றும் 1 ஜனவரி 2020 ஆகிய நாட்களில் மேற்கண்ட இடங்களில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடுவது தடை செய்யப்படுகிறது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினரிடம் உரிமம் பெற்று இயங்கிவரும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 31 டிசம்பர் 2020 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கேளிக்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட தடைகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்கள் உரிமம் தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கீழ் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.