தமிழ்நாடு
“அவர் தன் பயணத்தைத் தொடர வேண்டும்!”- ரஜினியின் அரசியல் எக்ஸிட் குறித்து சீமான்
சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தபடி, தான் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்றும் நேரடி அரசியல் களத்திற்கு வரப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தனது உடல்நிலை அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதனால் இம்முடிவை எடுப்பதாக ரஜினி அறிக்கை வெளியிட்டு விளக்கமாக கூறியுள்ளார். மேலும் தமிழக மக்களுக்குத் தன் சேவை தொடரும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.
அவரின் இந்த முடிவிற்குப் பல்வேறு தரப்பினர் ரியாக்ட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினியின் அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது அவர் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ளார்.
இது குறித்து சீமான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற் கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.
அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்!
— சீமான் (@SeemanOfficial) December 29, 2020