தமிழ்நாடு
திருமுருகன் காந்தி ;விடுதலை.. ஜாமினில் வெளியே வந்தார்!
வேலூர்: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் வேலூர் சிறை சென்று இன்றோடு 52 நாட்கள் ஆகிவிட்டது.இந்த நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில் உள்ளனர். அவர் மருத்துவனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வாய்ப்புள்ளது.