தமிழ்நாடு
திருநள்ளாறு சனிபெயர்ச்சிக்கு வருகிறீர்களா?- அரசு புது உத்தரவு!
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் பகவானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொண்டு வர வேண்டிய முக்கிய ஆவணங்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி திருநாள் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக கோயிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் திருநள்ளாறு கோயில் தரிசனத்துக்கான ஆன்லைன் பதிவு சீட்டோடு கடந்த 48 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா வைரஸ் பரிசோதனை சீட்டுடனும் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.