சினிமா செய்திகள்
நடிகை ஆலியா பட் உடன் திருமணமா?- மனம் திறந்த ரன்பீர் கபூர்
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட் உடன் தனக்கு திருமணமாகுமா என்பது குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளரின் நேரடி கேள்விகளுக்குப் பதிலளித்தார் நடிகர் ரன்பீர் கபூர். அப்போது நடிகை ஆலியா பட் குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையாகவே ரன்பீர் பதிலளித்தார்.
ரன்பீர் கூறுகையில், “எனது பெண் தோழி ஆலியா பட் உடன் எப்போது திருமணம் நடக்கும் என எனக்குத் தெரியவில்லை. அவருடன் நிற்கும் போது என்னைத் தாழ்வானவனாக நான் பார்க்கிறேன். ஆலியா பயங்கர உழைப்பாளி. திரைக்கதை எழுதுதல் முதல் கிட்டார் இசைப்பது வரை பல வகுப்புகளுக்குச் சென்று கற்றுக்கொண்டே இருப்பார். நான் ஒரு நாளைக்கு மூன்று திரைப்படங்கள் பார்ப்பேன். என் தகுதியை வளர்த்துக்கொள்ள நினைக்கிறேன்.
எப்போது திருமணம் எனத் தெரியவில்லை. ஆனால், மிக விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மிகுந்த ஆசை இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.