சினிமா செய்திகள்
நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள்… ஜோடியாக கைகோர்த்துக் கொண்டு திரும்பிய நயன்-விக்கி!
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் நடிகை நயன்தாராவும் அவரது காதலருமான இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ஜோடியாகக் கைகோர்த்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளனர்.
இவர்கள் கைகோர்த்துக் கொண்டு ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா ரஜினியின் அண்ணாத்த படப்படிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தார். விக்னேஷ் சிவன் காத்துவாக்குல் ரெண்டு காதல் படப்பிடிப்பில் இருந்தார்.
கொரோனா பீதியின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தனித்தனி படப்பிடிப்புகளுக்காக கொரோனா கட்டுப்பாடுகளின் கீழ் ஒரே நகரத்திலேயே பிரிந்து தங்கியிருந்த காதல் ஜோடி தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.