Connect with us

உலகம்

கிடுகிடுவென பரவும் ‘புது கொரோனா’ பல நாடுகளில் இருக்கலாம்: WHO விஞ்ஞானியின் பகீர் பேச்சு!

Published

on

soumya swaminathan - New Corona

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் பரவியிருக்கக் கூடும் என்கிற அதிர்ச்சிகர தகவலைத் தெரிவத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் குறித்து ஒரு முழுமையான ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு புதுவித கொரோனா வைரஸ் வந்தால் அந்த நாட்டால் உடனடியாக கண்டுபிடிக்க முடிகிறது. அவர்களைப் போல மற்ற நாடுகளும் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, புதுவித வைரஸ் அவர்கள் நாட்டிலும் பரவியிருக்கலாம் என்கின்ற முடிவுக்கு வரக்கூடும். அதே நேரத்தில் தற்போதைக்கு இது குறித்து எந்தவொரு முடிவுகளுக்கும் வர வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளார்.

‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு சமயங்களில் மிக அதிகம் மற்றும் அதிதீவிர பரவல்கள் இருந்து வந்தன. அதை ஒப்பிடும்போது இங்கிலாந்து தொற்றுப் பரவல் சற்று குறைவாகத்தான் உள்ளது. இதை நம்மால் கட்டுக்குள் வைக்க முடியும். தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது இந்த புது வைரஸ் நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிடவில்லை. அதே நேரத்தில் அதுவாக தொற்றுப் பரவலை குறைத்துக் கொள்ளும் என்று எண்ணிவிட முடியாது. முறையான நடவடிக்கைகள் தேவை’ என்று கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

முன்னதாக இங்கிலாந்தின் சுகாதார செயலாளர் மேட் ஹேங்காக், ‘கொரோனாவின் இந்த புது வகை கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. முன்னர் இருந்த வைரஸைவிட இது 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது’ என்று கூறினார். இங்கிலாந்தைப் போலவே தென்னாப்பிரிக்காவிலும் புதுவித கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையொட்டி உலகின் 30 நாடுகள் இந்த இரு நாடுகளுடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

 

வணிகம்57 நிமிடங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா11 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!