உலகம்
இது வித்தியாசமான சுனாமி.. இந்தோனேஷியா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது என்று குறைப்படுகிறத்து.
இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.
இதுதான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் சுனாமியை உண்டாக்கியது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 1200 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.