டிவி
பிக்பாஸ் ஆரி ரசிகர்களுக்கு ரம்யா பாண்டியனின் தம்பி ‘ஓர் வேண்டுகோள்’..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஆரியின் ரசிகர்களுக்கு நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி அதனது நிறைவுப் பகுதியை எட்டிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நடிகர் ஆரி மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் இடையே முட்டலும் மோதலுமாக உள்ளது. இதனால் திரைக்கு வெளியே ஆரி ரசிகர்கள் ரம்யா பாண்டியனை கடுமையான முறையில் விமர்சித்தும் கேலி செய்தும் ட்ரோல் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன், “எனது சகோதரிக்கு எதிராக தகாத வார்த்தைகள் நிறைந்த விமர்சனங்கள் வருகின்றன. பெண் போட்டியாளர் ஒருவரை இதுபோல் விமர்சிக்கக் கூடாது. இதை ஆரி ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரி சகோதரரே இதுபோன்ற செயல்களைப் பாராட்டவும் மாட்டார் விரும்பவும் மாட்டார்.
இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அந்தக் கண்ணோட்டத்துடன் மட்டுமே இந்நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். தொடர்ந்து உறுதுணையாய் நிற்கும் ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு எனது நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.