டிவி
Bigg Boss 4: எவிக்ஷனுக்குப் பின் அர்ச்சனாவின் முதல் போஸ்ட்
![Archana and Zaara - Bhoomitoday Archana and Zaara](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/1-20.jpg)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர், அவரது மகள் சாரா, தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவே எவிக்ஷனுக்குப் பின்னர் வெளிவரும் அர்ச்சனாவின் முதல் புகைப்படம் மற்றும் சோஷியல் மீடியா போஸ்ட்.
‘என்னுடைய பாஸ் திரும்ப வந்துவிட்டார். எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. கடவுள் இருக்கான் குமாரு’ என்று பதிவிட்டு, தன் தாயுடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சாரா. இதற்கு லைக்ஸ்களும் கமென்ட்ஸ்களும் அள்ளுகின்றன.
பிக் பாஸ் வீட்டுக்கு மற்ற போட்டியாளர்கள் போல நாள் 1 முதலே அர்ச்சனா கலந்து கொள்ளவில்லை. சில வாரங்களுக்குப் பின்னர்தான் அவர் வீட்டுக்குள் சென்றார். உள்ளே சென்ற அவர், பல சர்ச்சையான சம்பவங்களிலும் ஈடுபட்டார். அவரின் நடவடிக்கைகளுக்கு பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்படும் வரை ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்த வண்ணம் இருந்தன. இனி அர்ச்சனா முழு நேர தொகுப்பாளராக தன் பணியைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.