இந்தியா
இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விரட்டியடிப்பு!
ஜம்மு: ஜம்மு & காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழந்துளது.
இதனை அறிந்த இந்திய ராணுவம் உடனடியாக அந்த ஹெலிகாப்டரினை துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர். இதனால் இந்த் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்துத் தகவல் அளித்த ஜம்முவை சேர்ந்த இராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் தேவேந்ர ஆனந்த் சுமார் 12:10 மணியளவில் இந்திய எல்லையில் நுழைந்தது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறுவதற்கு எச்சரிக்கை அளிக்கச் சென்ற ஆண்டு இந்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.