சினிமா செய்திகள்
சிம்புவுக்கு எழுதிய கதையில் விஜய் நடிக்கிறாரா?
சிம்புவின் வேட்டை மன்னன் கதையில் தான் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன.
நயன்தாரா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற காமெடி திரைப்படும் கோலமாவு கோகிலா. இந்தப் படத்தின் கதை எழுதியவர் நெல்சன். இதுதான் இவருடைய முதல் படம் ஆகும். ஆனால், இதற்கு முன்பு சிம்புவின் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார். அந்தப் படம் வெளிவரவில்லை. டீசரும், போஸ்டரும் மட்டுமே வெளியாகின.
கோலமாவு கோகிலாவுக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்திற்கும் நெல்சன் கதை எழுதினார். தற்போது விஜய் நடிப்பில் தளபதி 65 படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விஜய்யின் தளபதி 65 படமும் வேட்டை மன்னன் கதை போன்று தான் என்றும், விஜய்க்காக சிறுசிறு மாற்றங்கள் கதையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் படக்குழு சார்பில் தளபதி 65 குறித்து முறையான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை