தமிழ்நாடு
‘இது நல்லாட்சியா..? காட்டாட்சிங்க..!’- எடப்பாடியை கிழித்துத் தொங்கவிட்ட உதயநிதி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடந்து வருவது நல்லாட்சியல்ல, காட்டாட்சி என்று விமர்சித்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
இது தொடர்பாக அவர், ‘போற இடமெல்லாம் தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு ஜப்பான்ல சொன்னாங்க, சிங்கப்பூர்ல எழுதுனாங்கன்னு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு தானே சர்ட்டிஃபிகேட் கொடுத்துக்கிறாரு. அப்படியென்ன தான் சாதனை பண்ணாருன்னு எவ்வளவு தேடுனாலும் கிடைக்கல. அவரும் சொல்ல மாட்டேங்குறாரு; இருந்தா தானே சொல்லுவாரு.
2000 கிளினிக் திறந்துட்டேன்னு சொல்றாரு. ஏற்கனவே இருக்குற அரசு மருத்துவமனைகள்லயே டாக்டர்ஸ் பற்றாக்குறைன்னு புகார் இருக்கு. அப்ப இந்த 2000 கிளினிக்ல என்ன நிலைமை? யார ஏமாத்த இந்த அறிவிப்புகள்? இப்படி கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் எடப்பாடிஜி சாதிச்சுட்டாருன்னு கொண்டாடுறது எதுக்கு?
எட்டு வழிச்சாலை – ஸ்டர்லைட் துப்பாக்கிச்சூடு – நீட் கொலைகள்- சி.ஏ.ஏ-வேளாண் விரோத சட்டங்களுக்கு வக்காலத்து- இட ஒதுக்கீட்டைப் பறிகொடுத்தது… இதுதான் எடுபுடிஜியோட சாதனை. அண்ணாவும் – கலைஞரும் கட்டியெழுப்பின தமிழகத்தை செல்லரிக்கிற மாதிரி சீரழிக்கிறதுக்கு பேர் நல்லாட்சியில்ல; காட்டாட்சி’ என்று கூறியுள்ளார்.