பல்சுவை
கைலாசாவுக்கு இலவச விசா.. அசத்தும் நித்தி
கைலாசாவுக்கு வர விரும்புகிறவர்களுக்கு மூன்று நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என்று நித்தியானந்தா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நாட்டில் யார் எப்படி போனால் என்ன, நமக்கு எப்போதும் கொண்டாட்டம் தான் என்று கூறும் விதமாக நித்தியானந்தா தனியாக ஒரு தீவில் சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் மட்டும் செல்லாமல் கூடவே சிஷ்யைகள் என்ற பெயரில் நிறைய பெண்கள் இருப்பதால் ஜகஜோதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என்று நித்தியானந்தாக கூறியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, கைலாசாவுக்கு வர விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஆஸ்திரேலியாவில் இருந்து கருடா என்ற தனி விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சிவனை வழிபடும் நோக்கத்தில் உள்ள ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும் ஊர் சுற்றி பார்க்க வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வரவர நித்தி வேற லெவலில் களம் இறங்கி வருகிறார்.