Connect with us

தமிழ்நாடு

கட்டுக்கடங்காமல் பரவிய தொற்று… ஐஐடி மெட்ராஸில் இவ்ளோ பேருக்கு கொரோனாவா?

Published

on

சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஐஐடி மெட்ராஸில், 141 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வரை கூடுதலாக 8 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது வரை ஐஐடி மெட்ராஸில் 191 பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்தது. அப்படி அனுமதி கொடுத்த ஒரு சில நாட்களில் சென்னையில் இருக்கும் முக்கிய கல்வி நிறுவனத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணத்தினால் மாநிலத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஐஐடி மெட்ராஸில் தற்காலிகமாக தனது துறைகள், பரிசோதனைக் கூடங்கள், நூலகங்களை ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மூடியுள்ளார்கள். இது குறித்து ஐஐடி மெட்ராஸில் பயின்று வரும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸில் ஏற்பட்ட இந்த பாதிப்புக்குக் காரணம், வளாகத்தில் உள்ள விடுதி கேன்டீன்தான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அங்கு மாணவர்கள் போதிய முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்காமல் மிகவும் நெருக்கமாக புழங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எல்லோரும் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வளாகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள குறைந்த விகிதத்திலான மாணவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஐஐடி மெட்ராஸில் சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று சோதனை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

ப்ரோக்கோலி: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ. 2,40,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: நீதிமன்ற உத்தரவு

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

NTPC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

SIDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.40,000/- சம்பளத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா7 மணி நேரங்கள் ago

தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது!

பர்சனல் ஃபினான்ஸ்7 மணி நேரங்கள் ago

புதிய மற்றும் பழைய வருமான வரி முறை: உங்களுக்கு எது சிறந்தது?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பத்திற்கு கடைசி தேதி நீட்டிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்8 மணி நேரங்கள் ago

ஜூலை 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!