Connect with us

கிரிக்கெட்

‘கோலி இல்லைன்னா நான்தான் டீம் கேப்டனா..?’- ரஹானே ஓப்பன் டாக்

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார். அதன் பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்ப உள்ளார். தனக்கும் தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் குழந்தை பிறக்கவுள்ளதால், அவருடன் இருக்க விராட், தாயகம் திரும்புகிறார். கோலி இல்லாமல் யார் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருக்கும் ரோகித் சர்மா, இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் விளையாட தகுதி படைத்தவராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே, அவருக்கு கேப்டன்ஸி பொறுப்பு கொடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியே ரஹானேவுக்கு கேப்டன்ஸி வழங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த சர்ச்சை குறித்து ரஹானே பேசுகையில், ‘என்னைப் பொறுத்தவரை, நான் நிகழ்காலத்தில்… இந்த சமயத்தில் என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்பேன். அதில்தான் எனது கவனம் இருக்கும். எதிர்காலத்தில் அல்லது இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, விராட் கோலிதான் எங்கள் கேப்டன். எனவே அந்தப் போட்டியில் எப்படி விளையாடுவது, விராட் கோலிக்கு எப்படி உதவிகரமாக இருப்பது என்பதில்தான் எனது எண்ணம் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எப்போதும் கடினமான ஒன்றுதான். ஆஸ்திரேலிய அணி வலுவாக இருப்பதாகவே எண்ணுகிறேன். அவர்களுக்கு உண்டான மரியாதையை நீங்கள் கொடுத்துதான் ஆக வேண்டும். அதே நேரத்தில், இந்திய அணிக்கென்று பல பலங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்தி விளையாடுவதில்தான் இந்த தொடரின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்’ என்றுள்ளார்.

 

 

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!