தமிழ்நாடு
முதல்வர் குறித்து அவதூறு: ஆர்.எஸ்.பாரதி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
![RS Bharathi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/RS-Bharathi.jpg)
திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25-ஆம் தேதி திமுகவுக்கு எதிராக அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் திமுகவையும் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக அதிமுக அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் விமர்சித்தனர். இதனையடுத்து திமுக சார்பில் அதற்கு அடுத்த நாள் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கோவை பேரூரில் நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுகவை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் பேரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான ஜெகநாதன் அளித்த புகாரையடுத்து ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்எல்ஏ கார்த்திக், திமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பேரூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.