வைரல் செய்திகள்
சிறுவன் பிடித்த பீடி.. நையப் புடைத்த டாடி!
இணையமும், செல்போனும் நம் அறிவை வளர்ப்பதற்கு தானே தவிர, கெடுப்பதற்கு அல்ல. ஆனால், இப்போது சமூகவலைதளங்களும் இணையதள பயன்பாடும் பெருகிவிட்ட நிலையில், அது இளையோர்களின் வாழ்க்கையை தவறான பாதைக்கு திசைதிருப்பும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக இளம் வயது சிறுவர், சிறுமியர்கள் இணையதளத்தைப் பார்த்து நெகட்டிவான பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு, அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
இந்த நிலையில், தற்போது சில சிறுவர்கள் தங்களை சமூகவலைதளங்களில் அனைவரும் பார்க்க வேண்டும், லைக்குகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிகரெட் பிடித்து அதனை ஷேர் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சிறுவனின் தந்தைக்கும் தெரியவர, அவ்வளவு தான். பெல்டை எடுத்து சிறுவனை சராமாரியாக அடித்து துவைத்து தொங்க விட்டுவிட்டார். இவர் அடிக்கும் வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்!