இந்தியா
ஆதார்: தனியாருக்கு ஆதரவாக மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடிவு!
![aadhar-759 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/aadhar-759.jpg)
டெல்லி: ஆதார் விவரத்தை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்ட வர இருப்பதாக தகவல்கள் வருகிறது.
ஆதார் குறித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.இதனால், மத்திய அரசு தனியாருக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளது.
அதாவது வங்கிகள், மொபைல் நிறுவனங்கள் ஆதார் அட்டையை கேட்பதில் தவறு கிடையாது என்று அனுமதி அளித்து, சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது,