சினிமா
உலகின் யதார்த்தமான புன்னகையாளர்- ஏதென்ஸில் தீபிகா படுகோனுக்கு கற்சிலை
உலகின் யதார்த்தமான புன்னகை உடையவர் என ஏதென்ஸ் விமான நிலையத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு மார்பில் கல்லில் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஏதென்ஸ் விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதினால் ‘யதார்த்தமான புன்னகை பிரசாரம்’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வுக்காகப் பல பிரபலங்களின் சிலைகள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. சாம்பல் நிறத்திலான மார்பிள் கொண்டு தீபிகாவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபிகாவுக்கு முன்னரே லண்டனில் உள்ள மதான் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.