சினிமா செய்திகள்
வலிமை படம் அப்டேட் எப்போது.. அஜித் மேனேஜர் ரசிகர்களுக்குக் கடிதம்!
அஜித் குமார் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
வலிமை படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. எனவே அஜித் ரசிகர்கள் எப்போதுதான் வலிமை படத்தின் அப்டேட் வரும் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தயாரிப்பு குழுவினர் மற்றும் இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்டவர்களிடம் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்கும் அஜித் குமார் ரசிகர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள, அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு… படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு ஆஜித் குமார் அவர்களும், அனுபவிக்கத் தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து “வலிமை” படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வலிமை படத்தின் முக்கிய சண்டைக் காட்சி வெளிநாட்டில் படப்பிடிப்பு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்த உடன், வெளிநாடு சென்று வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
கண்டிப்பாக வலிமை படம் 2021, மே 1-ம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாள் சிறப்புப் படமாக வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அறிவிப்பு pic.twitter.com/iW0P0TdG4f
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2020