வைரல் செய்திகள்
முதல் பேரன்… உற்சாகத்தில் முகேஷ் அம்பானி குடும்பத்தார்..!
முகேஷ் அம்பானியின் முதல் மகனான ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அம்பானி குடும்பத்தில் முதல் பேரக் குழந்தை என்பதால் குடும்பத்தார் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அம்பானி குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருபாய் அம்பானி- கோகிலாபென் தம்பதியரின் கொள்ளுப்பேரனும் முகேஷ் அம்பானி- நீடா தம்பதியரின் பேரனும் பிறந்திருப்பதில் குடும்பத்தார் மகிழ்ச்சியில் உள்ளனர். தாய் ஷ்லோகா மற்றும் குழந்தை நலமாக உள்ளனர். மேத்தா மற்றும் அம்பானி குடும்பத்தாருக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஆக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2019-ம் ஆண்டு ஆகாஷ் அம்பானி- ஷ்லோகா மேத்தா திருமணம் உலகப் பிரபலங்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.