Connect with us

செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் கை வெட்டப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைப் பேச்சு

Published

on

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் அவர்கள் கை துண்டிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு, அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டவரின் படத்தை வைத்து அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அவருக்கு அரசு சார்பிலேயே நினைவிடம் அமைக்கப்படுவதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து திமுக தரப்பிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘உலகம் போற்றும் உத்தமத் தலைவி குறித்து விமர்சித்துப் பேச திமுகவினருக்கு அருகதை இல்லை. ஏழரைக் கோடித் தமிழர்களால் விரும்பப்படும் ஒரு அரசியல் தலைவர் குறித்து திமுகவினர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். அதையும் மீறி பேசினால், அவர்களுக்கு ஈடாக பேச எங்களுக்கும் தெரியும். ஆனால், அப்படி செய்ய வேண்டாமென நாங்கள் நினைக்கிறோம்.

ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் கட்டப்படும் நினைவிடத்தில் யாராவது கை வைத்தால் அவர்கள் கை வெட்டப்படும். இதை துணிச்சலோடு சொல்கிறேன். தமிழகத்தில் இருக்கும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கை வைத்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்’ என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!