தமிழ்நாடு
இந்த கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டதுண்டா: மு.க.ஸ்டாலின் விளாசல்!
கடந்த 25-ஆம் தேதி ஆளும் அதிமுக எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தியது. ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறதா என பலரும் கிண்டலுடன் நகையாடினர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என கலந்துகொண்டனர். இதில் திமுகவையும், ஸ்டாலினையுமே அதிகமாக விமர்சித்தனர். அப்போது முதல்வர் திமுகவை கட்சியல்ல கம்பெனி என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் கூறும் விதமாக நேற்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க நினைத்து, திமுகவுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தி ஜனநாயகத்தையே நகைச்சுவைப் பொருளாக்கியுள்ளனர்.
7 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுக்கு எதிராக, ஆளுங்கட்சி போராட்டம் நடத்தும் கேலிக்கூத்தைக் கேட்டதுண்டா? கண்டது உண்டா? அந்த இழிவான, மலிவான பெயரைப் பெற்றவர்கள்தான் அதிமுக ஆட்சியாளர்கள் என்றார் ஸ்டாலின்.