வணிகம்
மத்திய அரசின் இந்த முடிவால் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களின் விலை உயர வாய்ப்பு!
மத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறை மீதான தாக்கத்தின குறைக்கப் புதன் கிழமை இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் இறக்குமதி செய்யப்படும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், ஸ்பீக்கர், காலாணிகள், ரேடியல் கார் டயர், வைரம், விளைய உயர்ந்த ஆடம்பர கற்கள், கழிவறை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ரேப்பர்கள், சமையல் அறை பிளாஸ்டிக் பொருட்கள், ஸ்டேஷ்னரி, டிராவல் பேக்ஸ் உள்ளிட்டவையின் விலை 25 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் எரிபொருள் விலை அதிகம் என்ற காரணத்தினால் நட்டம் அடைந்து வருகிறது. ஆனால் விமான எரிபொருள் விலையும் 0 முதல் 5 சதவீதம் வரை உயர வாய்ப்புகள் உள்ளது.