இந்தியா
உலகின் 3வது பெரிய வல்லரசாகும் இந்தியா.. கருத்து கணிப்பு!
சென்னை: 2030ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
எச்எஸ்பிஐ வங்கி மூலம் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2030ல் உலகின் நம்பர் ஒன் நாடாக சீனா இருக்கும். 2030 அதன் ஜிடிபி மதிப்பு 26.7 டிரில்லியன் டாலராக இருக்கும்.
அமெரிக்கா இரண்டாம் இடத்தில் இருக்கும். 2030ல் இதன் ஜிடிபி மதிப்பு 25.2 டிரில்லியன் டாலராக இருக்கும்.
2030ல் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5.9 டிரில்லியன் டாலராக இருக்கும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடக மாறும்.