சினிமா செய்திகள்
விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
நடிகர் சியான் விக்ரமின் பெசண்ட் நகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, அவரது ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்துக் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விக்ரம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இது வழக்கம் போல பிரபலங்கள் வீட்டிற்கு வரும் போலி வெடி குண்டு மிரட்டல் அழைப்பே என்று தெரியவந்துள்ளது.
பின்னர் யார் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் என்று காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து விக்ரமும் காவல் துறையினரும் எந்த ஒரு அறிக்கையும் இதுவரையில் வெளியிடவில்லை.
எனவே அதிர்ச்சியில் உள்ள விக்ரமின் ரசிகர்கள், விரைவில் யாரேனும் ஒருவரிடமிருந்து அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அண்மையில் கூட விஜய் வீட்டிற்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததும், பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விக்ரம் இப்போது கடாரம் கொண்டான், துருவநட்சத்திரம், மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து என பல்வேறு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.