தமிழ்நாடு
என்னுடைய முடிவைச் சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் வர இருக்கும் தேர்தல், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது என்ற முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “எல்லோரும் என்னிடம் அவர்களது கருத்துகளைச் சொன்னார்கள். நானும் என்னுடைய பார்வைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். நானும் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் தெரிவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.” என்று கூறினார்.
மேலும் கூட்டத்தின் போது மன்ற செயலாளர்கள், நான் கட்சி தொடங்கினால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளனர். சில மன்ற செயலாளர்களின் செயல்பாடுகளில் தான் திருப்த்தி அடையவில்லை என்று ரஜினிகாந்த் கடிந்துகொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்த போது, இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்தனர்.