இந்தியா
ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்!
ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு, மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக சார்பாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது “ஹைதராபாத் பெயரை பாக்யநகராக பெயர் மாற்றம் செய்ய முடியுமா என்று பலரும் கேட்கின்றனர். ஏன் மாற்ற முடியாது?
உத்திரப் பிரதேசத்தில் பாஜக் ஆட்சிக்கு வந்த பிறகு பைசாபாத் பெயரை ஆயோத்யா என்றும் அலகாபாத்தை பிரயகராஜ் என்று நாங்கல் பெயர் மாற்றம் செய்துள்ளோம். அதுபோல ஹைதராபாத் பெயரை ஏன் பாக்யநகர் என்ற மாற்றம் செய்ய முடியாது?” என்று பேசினார்.
யோகி ஆதித்யநாத் கருத்துக்குப் பதிலடி அளிக்கும் வகையில் பேசியுள்ள மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைஸி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், புதிய பிரதமரைத் தேர்வு செய்வது போல உள்ளது. பாஜக தலைவர்கள் எல்லாம் ஓடி வந்து பிரசாரம் செய்கிறார்கள். அதிபர் டிரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை. பாஜக அதிகாரத்துக்கு வந்தால் ஹைதராபாத் பெயரை மாற்றம் செய்வார்களாம். உத்திரப் பிரதேசத்திலிருந்து பிரச்சாரத்துக்கு வந்தவரைப் பெயரை மாற்றிவிடுவோம்.
நீங்கள் என ஹைதராபாத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளீர்களா? உள்நாட்டு உற்பத்தியில் தெலுங்கானா 5வது இடத்தில் உள்ளது. உத்திரப் பிரதேசம் 29வது இடத்தில் உள்ளது, இவர்கள் நம்மை விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படியாவது மதவாத அரசியை நுழைத்து, தெலுங்கானாவில் உள்ள அமைதியைக் கொடுக்க முயல்கிறார்கள். வருங்காலத்தில் நமடு சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள் என்று கூறினார்.