சினிமா
சர்கார் திரைப்படத்தின் “சிம்டாங்காரன்“ என்ற பாடலின் அர்த்தம் என்ன?
விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப் பெரிய வர வேற்பினை பெற்றுள்ளது.
படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி நடிப்பில் ஏர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் சர்கார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சிம்டாங்காரன்’ வெளியானது. இப்படத்தின் சிங்கிள் பாடல் 25ம் தேதி மாலை வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் சிம்டாங்காரன் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியாமல் பலரும் குழம்பினார்கள். இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது டிவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்.
அதில், சிம்டாங்காரன் என்றால், கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன். கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்க தோனுமே… அந்த ஒருவன் நம் சிம்டாங்காரன் எனப் பதிவிட்டிருக்கிறார்.