இந்தியா
நிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?
நிவர் புயல் காரணமாகப் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று தகவல்களை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார்.
மாநில பேரிடர் மேலாண்மைத் துறையில் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பின் நிவாரணத்திற்காக முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி கேட்க இருக்கிறோம்.
மொத்த இழப்பீடு 400 கோடி ரூபாயாக இருக்கும் என்று உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை வந்த பிறகு புயல் நிவாரணத்திற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.