தமிழ்நாடு
கரையைக் கடந்த நிவர்.. தமிழக வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
வங்கக் கடலில் காற்றழுத்தமாகத் தொடங்கி புயலாக உருவெடுத்த நிவர், இப்போது கரையை வலுவிழந்து கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்தாலும் தற்போது தமிழகப் பகுதியில் தான் புயல் உள்ளது. காலை 6:30 நிலவரத்தின் படி வந்தவாசி பகுதியில் வலுவிழந்த புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்னும் 24 மணின் நேரத்திற்குத் தொடர்ந்து மழை பெய்யும். தமிழகப் பகுதியில் உள்ள நிவர் புயல் அடுத்தாக கர்நாடகம் செல்லும் அப்போது அங்கும் கனமழை பெய்யும்.
நேற்று அதிதீவிர புயலாக உருவாகி இருந்த நிவர், புதுச்சேரி அருகே நள்ளிரவு 11:30 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2:30 மணியளவில் வலுவிழந்து கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்பட்டது.
அடுத்த 6 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகரும் புயல் முழுமையாக வழுவை இழக்கும்.
தமிழகத்தில் 1.30 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் நிலப்பகுதிக்கு வந்ததுதான் வலுவிழந்ததுக்கான காரணம்.
புயலால் கீழ் விழுந்த மரம் மற்றும் மின்கம்பங்களை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன.
சென்ம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த 9 ஆயிரம் கண கடி நீர், தற்போது 5 ஆயிரம் அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.