சினிமா செய்திகள்
விஷாலின் தலைவலிக்கு இதுதான் உண்மையான காரணம்!
நடிகர் விஷால் சக்ரா படத்தைத் தொடர்ந்து, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, விடுதி அறைக்குச் சென்ற நடிகர் விஷால் 4 நாட்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை.
அதனால் பல லட்சம் ரூபாய் ஷூட்டிங் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. பின்னர் அவன் இவன் படத்தில் நடிக்கும் போது, விஷால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து விஷாலுக்கு அடிக்கடி தலைவலி வரும். அதனால்தான் விஷால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால், விஷாலுக்குச் சென்று ஆண்டு நடைபெற்ற நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணிடம் இருந்து பிரிவு ஏற்பட்டுவிட்டதாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த குடும்பம் அவருக்கு பெரும் தொகை ஒன்றை அளித்ததாகவும், அதை இப்போது திருப்பி கேட்பதாகவும், விஷால் தற்போது இருக்கும் நிதி நெருக்கடியில் திருப்பி அளிக்க முடியாத சூழலில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இவை மட்டுமல்லாமல், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று எல்லா பக்கமும் இவர் மீது நிதி மோசடி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இவற்றால் ஏற்பட மன உலைச்சல் காரணமாகத் தான் விஷாலுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது என்றும் கூறப்படுகிறது.