தமிழ்நாடு
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!
![Rain 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Rain-2.jpg)
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தமிழகத்தில் நடைபெற உள்ள வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. சென்ற மாதம் மேற்கு பெசபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்துக்கு வர வேண்டிய மழை மற்றும் காற்றின் வேகம் திசை மாறியிருந்தது.
தற்போது அதில் ஏற்பட்ட மாற்றத்தால், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. எனவே வர இருக்கும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தேசிய பேரிடர் ஆணையம் எச்சரித்துள்ளது.
அதை உறுதி செய்து தமிழக மாநில பேரிடர் ஆணையமும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.