தமிழ்நாடு
மகிழ்ச்சி.. மருத்துவ படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதல்!
மருத்துவ படிப்புகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் இந்த அவசர சட்டம் குறித்து, பல்வேறு கோணங்களில் ஆலோசனை செய்த பிறகு, ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நேற்று தமிழக அரசு புதிய அவசர சட்டம் ஒன்றை இயற்றி, அதன் மூலம் நடப்பு நிதியாண்டு முதலே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்திருந்தது.
ஆனாலும் அது தற்காலிகமான ஒன்றே, ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் தான் அது முழுமை பெறும் என்று சட்ட வல்லுநர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து, பலவேறு தரப்பினரிடையில் ஆலோசனை நடத்திய நிலையில் நேற்று அது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இன்று தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன் மூலம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வின் போதே உள் ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
இந்த உள் ஒதுக்கீட்டால் தமிழக அரசு பள்ளிகள் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த 303 பேர் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக இந்த இட ஒதுக்கீடு இல்லாமல் 8 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.