தமிழ்நாடு
முதல்வர் பழனிசாமிக்கு மாட்டு வண்டி பரிசு வழங்கிய அமைச்சர்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாட்டு வண்டி மற்றும் இரண்டு காளை மாடுகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார்.
அண்மையில், காவிரி – வைகை குண்டாறுகளை இணைக்கும் திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதற்கு நன்றி தெரிவிக்குமாறும், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மையமாக அறிவித்தற்காகவும், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பல்வேறு நலப்பணிகளுக்கு வந்து சென்றதற்காகவும் நினைவுப் பரிசாக மாட்டு வண்டி மற்றும் இரண்டு காளை மாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிசாமிக்கு வழங்கினார்.
மேலும் அந்த மாட்டு வண்டியை வழங்கும் முன்பு, அந்த வண்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டியும் வழியனுப்பி வைத்துள்ளார்.
இந்த மாட்டு வண்டு மற்றும் காளை மாடுகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.