Connect with us

உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா?

Published

on

2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம்  ஊக்குவிப்பு போன்ற காரணங்களுக்காக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளித்து ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடை 2020-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியுடன் காலாவதியானது என்று தெரிவித்து இருந்தது. அதன் படி தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களிலிருந்து 2018-ம் ஆண்டு பின் வாங்கிய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகளையும், ஈரான் உடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. வர்த்தகத்தைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டியது.

அதே நேரம் இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய்க்காகச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய்க்காக டாலர் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையும், தொடர்ந்து அவர்களுடன் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. அதை இந்தியாவும் ஏற்றது.

ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. எனவே வரும் நாட்களில் பிற நாடுகள் ஈரான் உடன் வர்த்தகத்தைச் செய்யவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுவதிலும் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஈரான் இடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. பொருளாதாரத் தடை நீங்கியுள்ளதால் அங்கு இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை குறைப்பு ஏதும் பெரியளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை தொடர்கிறது. நேற்றுக் மூட ஈரான் உடன் வர்த்தகம் செய்து வரும் 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!