தமிழ்நாடு
லொடுக்கு பாண்டி கருணாஸ்: ஜெயகுமார் விளாசல்!
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சாதி ரீதியாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய கருணாஸை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விளாசி பேட்டியளித்துள்ளார்.
கருணாஸ் தனது பேச்சில் சர்ச்சைக்குறிய கருத்தக்கள் பலவற்றை தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருணாஸ் உள்ளிட்ட சிலர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து கருணாஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், கருணாஸ் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதை ஏற்க முடியாது. அதிமுக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் லொடுக்கு பாண்டி கருணாஸ் சாதியரீதியாக பேசியதற்கு திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார் அவர்.