கிரிக்கெட்
ஆசிய கோப்பை 2018: 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்ற இந்தியா!
துபாய்: ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வங்க தேசம் 49.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்களையும் இழந்தது. பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடிய இந்தியா 36.2 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 174 ரன் எடுத்து வெற்றிப் பெற்றது.
கேப்டன் ரோகித் ஷர்மா 104 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதி வரை விளையாடினார். ஷிக்கர் தவான் 47 பந்துகளில் 40 ரண்களும், அம்பத்தி ராயடு 28 பந்துகளில் 13 ரன்களும், தோணி 37 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தது ஆட்டம் இழந்தனர். பின்னர்க் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 3 பந்துகளில் 1 ரன் எடுத்தபோது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை இந்தியா வென்றது.