சினிமா
மலையாள நடிகர் திலீப்பின் மனைவிக்குக் காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு
![kavya m - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/kavya-m.bmp)
மலையாள நடிகர் திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2வது திருமணம் கடந்த 2016, நவம்பர் மாதம் செய்து கொண்டார்கள்.
இது மலையாள திரையுலம் மட்டுமின்றித் தென்னிந்திய திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் திருமணத்திற்குப் பின்னர் மகள் மீனாட்சியைத் தன்னுடனே திலீப் வைத்துக் கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு நடிகர் திலீப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி ஜெயிலுக்குச் சென்றார். இப்போது திலீப் ஜாமீனில் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை காவ்யா தற்காலிமாக நிறுத்திக் கொண்டுள்ளார்.
கேரளாவில் உள்ள அவரது வீட்டில் காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. காவ்யா மாதவன் மஞ்சள் கவுன் அணிந்து இருந்தார். நெருங்கிய உறவினர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.