பல்சுவை
இந்த காய்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
அவரைக்காய்:
அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன. அவரைகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அவரைக்காயில் உள்ள பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ள நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
வெண்டைக்காய்:
நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன. மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தக்காளி:
தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.
கோவைக்காய்:
வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்கு கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
சுரைக்காய்:
இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ஆண்மை சக்தியை ஊக்குவிக்கும்.
சுண்டைக்காய்:
நுரையீரலுடக்கு செயல் திறன் தரும். சளியை போக்கும். வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்க்கலாம். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். இதில் வைட்டமின் பி,சி சத்துகள் அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு சிறந்தது. மூலநோய் உள்ளவர்கள் ஒரு கைப்பிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், கடுப்பு நீங்கும்.
நெல்லிக்காய்:
தலைமுடி, தோல், கண் பார்வை, இதயம், நுரையீரலுக்கு நல்லது. நெல்லிக்காய் குடலியக்கத்தைச் சீராக வைக்கும், எனவே நெல்லிக்காய் சாற்றைத் தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கும்.
முள்ளங்கி:
முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்க செய்கிறது. சக்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
பீட்ரூட்:
இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய்களில் இதுவும் ஒன்று. நம் உடலின் இரத்ததின் அளவை அதிகரிக்க செய்வதில் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகிறது.
கேரட்:
கேரட்டில் வைட்டமின் ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.