சினிமா செய்திகள்
மண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்!
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் உடல், 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1 மணிக்கு உயிரிழந்தார்.
ஸ்.பி. பலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பலசுப்பிரமணியம் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.