தமிழ்நாடு
ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
சென்னை மாதவரம் சுற்றுவட்டாரத்தில், ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
மணலியைச் சேர்ந்த பெண் ஒருவர், புகார் ஒன்றை அளித்தார். அதில் மாதவரம் பால் பண்ணை அருகில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது, காவலர் என்று கூறிக்கொண்டு வந்த நபர் ஒருவர் ஆண் நண்பரை விரட்டியடித்துவிட்டு தன்னை பாலியை வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்து இருந்தார். மேலும் தன் கை பையில் வைத்திருந்து 15 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பிடுங்கிச் சென்றதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், சிசிடிவி காட்சி ஒன்றை ஆய்வு செய்த போது, பிச்சைமணி என்பவன் தான் இதற்குக் காரணம் என்று கண்டு பிடித்து கைது செய்தனர்.
அவனை விசாரணை செய்ததில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம், காவலர் எனக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.