Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி?

Published

on

ஆர்பிஐ அறிவுறுத்திய கடன் தவணை ஒத்திவைப்பு, 2020 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதை அடுத்து 6 மாதங்கள் வரை வங்கி வாடிக்கையாளர்கள் கடன் தவணையைத் திருப்பி செழுத்த தடை பெற்றதல், வட்டிக்கு வட்டி போன்றவை உண்டு. எனவே அதை மறுகட்டமைப்பு செய்து, தவணை காலத்தை நீட்டிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எஸ்பிஐ வங்கி தங்களது கடன் திட்டங்கள் மீதான மறுசீரமைப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வெளியிட்டுள்ளது. எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் எப்படி தங்களது கிரெடிட் கார்டு திட்டங்கள் முதல் கடன் திட்டங்கள் வரை அனைத்தை மறுகட்டமைப்பு செய்வது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) ரிசர்வ் வங்கியால் அங்கீரக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டம் என்ன?

கோவிட்-10 தொற்றுநோயால் உருவாகியுள்ள பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கான தீர்மான திட்டங்களை செயலடுத்த வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு கட்டமைப்பை வழங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்குக் கணிசமான நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பிற்கான கொள்கையை உங்கள் வங்கி வடிவமைத்துள்ளது.

2) மறுசீரமைப்புக்குத் தகுதியானவர் யார்?

அ) ஸ்டாண்டர்டு என வகைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், ஆனால் 2020 மார்ச் 1 நிலவரப்படி வங்கியுடன் 30 நாட்களுக்கு மேல் தவணை பக்கி ஏதும் இல்லை மேலும் இன்றுவரை அனைத்து கடன்கள் / வசதிகளிலும் முறையாக உள்ளவர்கள் மறுசீரமைப்பிற்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஆ) கோவி-19 தொற்று நோயால் வாடிக்கையாளர் குறைவான வருமானம் / வருமான இழப்பு அல்லது பணப்புழக்கங்கள் போன்றவற்றில் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இ) கொவிட்-19 தாக்கத்தின் காரணமாகப் பணப்புழக்கத்தின் வீழ்ச்சியைக் காட்டும் ஆவணங்கள் / தகவல்கள் வங்கி அடிப்படையில் வருமானக் குறைப்பு மற்றும் அதன் நிதி பாதிப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யும். மறுசீரமைப்பை வழங்குவதற்கு முன்,, வழங்கப்பட்ட ஆவணங்களை மறூசீரமைக்கபப்ட்ட ஈஎம்ஐ-களின் அடிப்படையில் செலுத்த வாடிக்கையாளரின் நம்பாத்தனமையை வங்கி மதிப்பீடு செய்யும். நம்பத்தன்மையைக் கணக்கீடுகளைத் தவிர, வாடிக்கையாளரின் திரும்பிச் செலுத்தும் தடப் பதிவு மற்றும் வாடிக்கையாளர் முன்கூட்டியே தடைக்காலத்தை பெறும்போது அளித்த பதில்களும் மறுசீரமைப்பு முடிவில் காரணியாக இருக்கும்.

3) எனது கடனில் மறுசீரமைப்பு நன்மையை எவ்வாறு பெறுவது?

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தொடர்புடைய விவரங்களைச் சமர்ப்பிக்க விண்ணப்ப இணைப்புக்காக வங்கியின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம். மாற்றாக நீங்கள் உங்கள் RM-ஐ தொடர்பு கொள்ளலாம். பயன்பாட்டிற்கான இணைப்பு விரைவில் புதுப்பிக்கப்படும்.

4) எனக்குக் கிடைக்கக் கூடிய மறுசீரமைப்பு விருப்பங்கள் யாவை?

உங்கள் மாதாந்திர ஈஎம்ஐ திருப்பிச் செலுத்தும் சுமையை எளிதாக்கக் கடனின் மீதமுள்ள காலம் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

5) மறுசீரமைப்பு நன்மை பெற நான் ஏதேனும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா?

உங்கள் வேலைவாய்ப்பு அல்லது வணிகத்தின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை வழங்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வங்கி கோருகிறது. சம்பளம் வாங்குவார்களுக்கு – சம்பள சீட்டுகள் மற்றும் வங்கி அறிக்கை தேவைப்படலாம். சுயதொழில் செய்பவர்கள் / நிறுவனங்களுக்கு – வங்கி அறிக்கை, ஜிஎஸ்டி வருமானம், வருமான வரி வருமானம், உதயம் சான்றிதழ் போன்றவை தேவைப்படலாம். ஆன்லைன் மறுசீரமைப்பு பயன்பாட்டிற்காக வங்கியின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம், அது விரைவில் புதுப்பிக்கப்படும்.

6) மறுசீரமைப்பு தொகுப்பைத் தேர்ந்தெடுப்பது எனது சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஆர்பிஐ ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் படி, நீங்கள் கடன் மறுசீரமைப்பு செய்துள்ளீர்கள் என்று தெரிவிக்கப்படும். எனவே சிபில் ஸ்கோரில் மாற்றம் ஏற்படும். ஆனால் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது.

7) எனது கடனை மறுசீரமைத்தால் செயலாக்கக் கட்டணம் அல்லது கட்டணங்கள் ஏதும் உண்டா?

உங்கள் கடனை மறுசீரமைக்க நீங்கள் தேர்வு செய்தால் வங்கி கட்டணம் வசூலிக்கலாம்.

8) நான் வங்கியில் பல கடன்களைப் பற்றுள்ளேன். ஒவ்வொரு கடனுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?

மறுசீரமைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஒரே விண்ணப்பத்தில் அனைத்து கடன்களை குறிப்பிடுவதற்கான வசதிகள் இருக்கும். நீங்கள் அளிக்கும் விருப்பத்தை வைத்து வங்கி முடிவை எடுக்கும்.

9) கிரெடிட் கார்டு கடன் திட்டங்களுக்கு மட்டும் தனியாக மறுசீரமைப்பு கிடைக்குமா?

கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பைப் பெறலாம்.

10) கிரெடிட் கார்டு ஜம்போ லோன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு செய்ய முடியுமா?

கிரெடிட் கார்டு ஜம்போ லோன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு செய்யலாம்.

11) மறுசீரமைப்பு பெற குறைந்தபட்ச நிலுவைத் தேவை உள்ளதா?

மறுசீரமைப்பு பெற குறைந்தது 25,000 ரூபாய் வரை கடன் செலுத்த வேண்டி இருக்க வேண்டும்.

12) சுய தொழில் / சிறு தொழில் நிறுவனங்களுக்காகக் கடன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு பெற முடியுமா?

சுய தொழில் / சிறு தொழில் நிறுவனங்களுக்காகக் கடன் பெற்று இருந்தால், அவர்களுக்கான சிறப்பு மறுசீரமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்கீழ் மறுசீரமைப்பு பெறலாம். அப்போது : https://udyamregistration.gov.in/Government-ofIndia/Ministry-of-MSME/online-registration.htm என்ற இணைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.

13) கடன் தவணை தடை பெறவில்லை என்றாலும் கடன் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய முடியுமா?

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், வங்கியின் அனைத்து வாடிக்கையாளரும் தகுதியுடையவர்கள் தான். எனவே கடன் தவணை தடை பெறவில்லை என்றாலும் மறுசீரமைப்பு பெறலாம்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!