உலகம்
சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்!
சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை அவர்கள் வீட்டிற்கே பார்சல் செய்து அனுப்புகிறது, தாய்லாந்து தேசிய பூங்கா.
பாங்காக் அருகில் உள்ள காவ் யை தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளே நுழையும் முன்பே அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
பின்னர் உள்ளே செல்லும் அவர்கள், குப்பைகளை வீசி சென்றால் அதை சிசிடிவி மூலம் கண்காணித்து, அந்த சுற்றுலா பயணிகளின் வீட்டிற்கே பேக் செய்து அனுப்புகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கவ் யாவ் தேதிய பூங்கா நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் குப்பைகளை வீச பயப்படுவதாகவும் கூறுகின்றனர்.