தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!
![Coronavirus - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/08/Coronavirus.jpg)
தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சில மாவட்டங்களில் மட்டும் கோவிட்-19 தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மக்கள் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவி வைத்துக்கொள்வது, கையுறை அணிவது, சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்துவது என்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இல்லை எனில் கொவிட்-19 தொற்றின் பரவல் வேகம் வேகமாக அதிகரிக்கும் என்று கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் அடுத்த 15 நாட்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்றும் கூறப்படுகிறது.
எனவே தமிழக அரசு இந்த 5 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.